லவ் ஜிஹாத் — மதத்தை நேசிப்பது
இஸ்லாத்தை வளர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கலாம், என்பதே ஜிஹாத் ஆகும் . அந்த முயற்சிகளில் காதலும் சேர்த்தியாகுமா? நடுநிலை மற்றும் இஸ்லாமிய ஆதாரங்களும் , ‘ஆம் , அந்த சாத்தியமும் உண்டு; நடைமுறையில் உள்ளன ‘.
மூல ஆசிரியர் — திரு S. குருமூர்த்தி
துக்ளக் ஆசிரியர் மற்றும் பொருளாதார , அரசியல் விமர்சகர்
https://www.newindianexpress.com/opinions/2020/nov/26/love-jihad-loving-for-religion-2228125.html
திருமணங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்த ஹார்வார்ட் உளவியாளர் ராபர்ட் எப்ஸ்டீன் அமெரிக்க, இந்தியத் திருமணங்களின் வேறுபாடுகளைக் கூறுகிறார்- அமெரிக்கர்களுக்கு , திருமணத்திற்கு முன்பு, காதல் அவர்களுக்கு ஒரு கட்டாயம் “; ஆனால் இந்தியர்களின் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ,முதலில் திருமணம், பின்பு வருவது காதல் “.சமகால இந்தியாவில்,பாரம்பரியமாக நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கும் மற்றும் காதல் திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு எல்லோர்க்கும் தெரியும்.கேரளாவில் , பத்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த , காதல் திருமணத்திற்கு மாற்றாகக் லவ் ஜிஹாத் , தற்போது இந்திய அளவில் மற்றும் உலகளாவி பரவி வருகிறது.
முதலில் இது ஒரு ஹிந்துத்தவ புரளி என்று நிராகரிக்கப்பட்டு, பின்பு, இது ஒரு இந்து, நாடு கடந்த பிரச்சினையாக மாறியுள்ளது.லவ் ஜிஹாத்தின் இருப்பை சிலர் மறுக்கின்றனர். ஆனால் லவ் ஜிஹாத் இருந்தால், அது ஒரு முனையில் மிகச் சக்திவாய்ந்த தனிப்பட்ட மனித தூண்டுதலான அன்பையும், மறு முனையில் , சமமான சக்திவாய்ந்த மனித கூட்டு உணர்ச்சியான மதத்தையும் , இணைக்கிறது. இந்த ஆபத்தான கலவையின் விளைவுகள், குடும்பங்களைத் துண்டித்து, சமூகங்களைத் துருவப்படுத்துகின்றன. இது ஆபத்தானது மற்றும் கொடியது. இந்த அதிக ஆபத்துள்ள லவ் ஜிஹாத் இருந் தால், அது முஸ்லீம் அல்லாத பெண்களுடன் முஸ்லீம் ஆண்களின் சாதாரண காதல் திருமணத்திலிருந்து எவ்வளவு வித்தியாசமானது என்பது மதச்சார்பற்ற இந்தியாவுக்கு முக்கியமானதாகும்.
காதல் திருமணம் vs லவ் ஜிஹாத்
காதல் திருமணம், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நேசிப்பதில் வேரூன்றியுள்ளது.லவ் ஜிஹாத், அதன் எதிர்ப்பாளர்கள் பார்வையில் , முஸ்லீம் ஆண்கள் தங்கள் மதத்திற்காக முஸ்லிம் அல்லாத பெண்களை அதிகம் நேசிக்கிறார்கள்.லவ் ஜிஹாத் காதல் திருமணம் அல்ல என்று அதன் எதிர்ப்பாளர்கள் புலம்புகிறார்கள்;ஏனெனில் மதத்திற்கு விசுவாசம் என்பது லவ் ஜிஹாத்தின் ஆதிக்கம் செலுத்தும் யோசனையாகும் அல்லது மையமாக இருக்கும். உலகளவில் , காதல் திருமணம் என்பது , ஒரே சமயத்திலிருக்கும் அல்லது வெவ்வேறு சமயத்திலிருக்கும் எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடப்பது . ஆனால் இஸ்லாமிய லவ் ஜிஹாத் என்பது முஸ்லிம் ஆண்களுக்கும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்கும் இடையில் மட்டுமே உள்ளது..
பின்விளைவு: இது முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் (கிறிஸ்தவர்கள் , பௌத்தர்கள் உட்பட) இடையே ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.சிலர் கூறுகிறார்கள், லவ் ஜிஹாத் என்பது இஸ்லாத்தை வெறுப்பதற்குச் சமமாகும். ஆனால், அதனால் பாதிக்கப்பட்ட மதவாதிகள் அது இல்லை என்று வலியுறுத்துகின்றனர்.உச்சநீதிமன்றத்தின் ஆணையால், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முஸ்லீம் ஆண்களுக்கும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்கும் இடையிலான 94 காதல் திருமண வழக்குகளை விசாரித்தது. அதில் 23 திருமணங்கள் லவ் ஜிஹாத்தாக சம்பவங்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இனி லவ் ஜிஹாத் பிரச்சினையைத் தள்ளுபடி செய்வது அவ்வளவு எளிதல்ல. அப்படியென்றால் , லவ் ஜிஹாத் என்றால் என்ன? காதல் என்பது எல்லோர்க்கும் எளிதில் புரியும்.ஆனால் , இஸ்லாமியப் போருடன் தொடர்புடைய ஜிஹாத்தின் பேரால் உண்டாகும் காதலைப் புரிந்த கொள்ளமுடியவில்லை . உண்மை என்னவென்றால், ஜிஹாத் போரை உள்ளடக்கியது, ஆனால் அத்தோட மற்றும் அது நிற்கவில்லை. ஜிஹாத் என்றால் இஸ்லாத்தை வளர்ப்பதற்காக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளலாம் . இஸ்லாத்தை வளர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கலாம், என்பதே ஜிஹாத் ஆகும் . அந்த முயற்சிகளில் காதலும் சேர்த்தியாகுமா? நடுநிலை மற்றும் இஸ்லாமிய ஆதாரங்களும் ,ஆம் , அந்த சாத்தியமும் உண்டு; நடைமுறையில் உள்ளன ‘.
மதத்திற்காக நேசிப்பது
இஸ்லாமியம் உட்பட ஆய்வுகள், காதல் திருமணம் இஸ்லாத்தை விரிவாக்குவதில் எவ்வாறு பங்கு வகிக்கிறது என்று குறிப்பிடுகின்றன.பிலிப் ஃபர்குஸ் தன்னுடைய “மக்கள்தொகை இஸ்லாமியமயமாக்கல்: முஸ்லீம் நாடுகளில் முஸ்லிமல்லாதவர்கள்” என்ற ஒரு கட்டுரையில், காதல் மற்றும் திருமணத்தின் மூலம் இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு (இஸ்லாமிய அல்லாதவர்களை ) இஸ்லாமியமயமாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறார்.ஃபர்குஸ் இறுதியில் இவ்வாறு முடிக்கிறார்: “கடந்த காலங்களில் எவ்வாறு இஸ்லாமியமயமாக்கலுக்கு வற்புறுத்தல் உபயோகப்படுத்தப்பட்டதோ, அதைப்போல், இப்போது காதல் அதே பங்கைக் செய்து கொண்டிருக்கிறது “ ((In Paul H. Nitze School of Advanced International Studies [SAIS] Review, Johns Hopkins University).
“உலகம் முழுவதும் இஸ்லாம் எவ்வாறு பரவியது” என்ற ஆய்வுக் கட்டுரையில் கட்டுரையில், இஸ்லாம் வாள் வழியாக மட்டுமே பரவியது என்ற கருத்தை ஹசம் முனீர் எதிர்க்கிறார்.முனீரின் கட்டுரை யாகீன் நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் தத்துவமும் மற்றும் நோக்கமும் , இஸ்லாமியப் வெறுப்பையும் , சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கத்தையும் எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.இஸ்லாமியம் பரவிய நான்கு முறைகளில் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் மதங்களுக்கு இடையிலான திருமணம் ஒன்றாகும் என்று முனீர் கூறுகிறார்.முனீர் எழுதுகிறார்: “வரலாற்றுரீதியாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையிலான திருமணம் பல சூழல்களில் இஸ்லாம் பரவுவதற்கு முக்கியமாக இருந்தது.இது சமீபத்தில் ஒரு கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய ஒரு ஆராய்ச்சிப் பகுதியாகும், ஏனெனில் இந்த செயல்முறையின் மூலம் இஸ்லாத்திற்கு மாறியவர்களில் பெரும்பாலோர் பெண்கள்”.
இஸ்லாமியம், காதல் மூலம் பரவிய நாடுகளை முனீர் பட்டியலிடுகிறார். ஸ்பெயினில் ஆரம்பக்கால முஸ்லீம் சமூகத்தை நிறுவுவதற்குத் திருமணத்தின் மூலம் மாற்றம் முக்கியமானது; ஆரம்பக்கால நவீன ஒட்டோமான் பேரரசு மாற்றத்தை உள்ளடக்கிய திருமணத்திற்குப் பல எடுத்துக்காட்டுகளையும் வழங்குகிறது;பிரிட்டிஷ் இந்தியாவில், முஸ்லிம்களுடன் திருமணத்தின் ஒரு பகுதியாகப் பல தலித் பெண்கள் இஸ்லாத்திற்கு மாறினர் என்று முனீர் எழுதுகிறார். “சமீபத்திய காலங்களில் இஸ்லாத்திற்கு மாறுவதில் திருமணமானது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சமகாலத்தில், இஸ்லாத்தைப் பரப்புவதில் ”காதல்” “வற்புறுத்தலுக்கு” மாற்றாக அமைந்துள்ளது என்ற பிலிப் ஃபார்குஸின் கருத்து முனீரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஃபார்குஸுடன் இயைந்து , முனிர் திருமணம் என்பது தனிநபர்களை மட்டுமல்ல, நாடுகளையும் இஸ்லாத்திற்கு மாற்றுவதற்கான அடித்தளமாக இருந்தது என்பதைக் காட்ட,வரலாற்றுச் சான்றுகளை அளிக்கிறார்.கிறிஸ்டியன் சி சஹ்னர், “இஸ்லாமியத்தால் வீழ்ந்த கிறிஸ்தவ தியாகிகள் : மத வன்முறை மற்றும் இஸ்லாமிய உலகத்தை உருவாக்குதல் (பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்)” என்ற தனது புத்தகத்தில்,”இஸ்லாம் கிறிஸ்தவ உலகில் படுக்கையறை வழியாகப் பரவியது” என்று கூறுகிறார்.முஸ்லீம் அல்லாத பெண்களுக்கு முஸ்லீம் ஆண்களின் அன்பு மத உந்துதலால் நிரம்பியுள்ளது.முஸ்லீம் ஆண்களுக்கு ,முஸ்லீம் அல்லாத பெண்கள் காதல் , மத உந்துதலால் ஏற்பட்டது.
மறுக்கமுடியாதபடி, முஸ்லீம் அல்லாத பெண்களுடன் முஸ்லீம் ஆண்களின் திருமணம் ஜிஹாத் மூலம் இஸ்லாத்தை பரப்புவதோடு ஒருங்கிணைந்திருக்கிறது.
ஒரு வழி பாதை
இதை மேலும் மோசமாக்குவதற்கு, முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையிலான திருமணம் ஒரு வழி பாதையாக திகழ்கிறது. ஏனெனில் இஸ்லாமியப் பெண்கள் முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்து அவர்களை மதத்திற்குள் அடைத்து வைத்திருக்கிறது. சான்றுகள், இந்த தடை நடைமுறையிலும் பின்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையத்தின் ஒரு ஆய்வில், தங்கள் மகன்கள் முஸ்லிம்கள் அல்லாத பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை உயர் மட்ட முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால், அவர்களின் மகள்கள் முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்துகொள்வது குறைந்து விரும்படுகிறது அல்லது விரும்பப்படுவதோ இல்லை.
இந்தியாவில் நிலைமை வேறுபட்டதல்ல. 2012 ஆம் ஆண்டில், கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி, 2009–12 ஆம் ஆண்டில், பிற மதங்களைச் சேர்ந்த 2,667 இளம் பெண்கள் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர், அதற்கு எதிராக மற்ற மதங்களுக்கு மாற்றப்பட்ட இளம் முஸ்லீம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 81 மட்டுமே (இந்தியா டுடே, 4.9.2012). இஸ்லாத்தில் திருமணமான முஸ்லிம் அல்லாத பெண்களின் எண்ணிக்கை இஸ்லாத்திற்கு வெளியே திருமணமான முஸ்லிம் பெண்களை விட 33 மடங்கு அதிகம்.
உலகமயமாகுதல் , கேரளாவின் ‘லவ் ஜிஹாத்’
இஸ்லாமிய வரலாற்றின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “லவ் ஜிஹாத்” என்ற சொல், மதத்துக்கான நேசித்தல் மற்றும் திருமணம் செய்தல் போன்ற செய்கைகளுடன் பொருந்திப் போகிறது.முஸ்லீம் அல்லாத பெண்களுடன் முஸ்லிம்களின் திருமணங்களை விசாரிக்கக் கேரள உயர் நீதிமன்றம் காவல்துறையிடம் கேட்டபோது இந்த வழக்கம் வெளிச்சத்துக்கு வந்தது. லவ் ஜிஹாத்தை, இந்துத்துவா குழுக்களின் பிரச்சாரம் என்று தள்ளுபடி செய்வதற்கான ஆரம்ப முயற்சிகள், “கிறிஸ்தவ பெண்களுக்கு எதிராக லவ் ஜிஹாத் என்று சமூக நடவடிக்கைக்கான கிறிஸ்தவ சங்கம் குற்றம் சாட்டியபோது ஒரு பின்னடைவைப் பெற்றது.
கத்தோலிக்க ஆசியச் செய்திகளின் ஒன்றியம் (13.10.2009) கேரளாவில் மதத்தை நேசிப்பது குறித்த அறிக்கையில் , தனது தலையங்கத்தை “இந்தியா: லவ் ஜிஹாத் குறித்து சர்ச் மற்றும் அரசாங்கத்தின் கவலை ’ என்று குறிப்பிட்டது. கர்நாடக அரசாங்கமும் லவ் ஜிஹாத்தை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியது.2010 ஆம் ஆண்டில், சிபிஎம்-குளிர்ச் சேர்ந்த கேரள முதலமைச்சர் வி .எஸ் .அச்சுதானந்தன், “பணம் மற்றும் திருமணங்களை” (டைம்ஸ் ஆப் இந்தியா, 26.7.2020) பயன்படுத்தி 20 ஆண்டுகளில் கேரளாவை இஸ்லாமியமயமாக்க இந்திய மக்கள் முன்னணி திட்டமிட்டுள்ளது என்றார், இது மீண்டும் மக்கள் அரங்கில் விவாதத்தைப் பிரதானமாக்கியது.முஸ்லிம்கள் மற்ற சமூகங்களுடன் திருமணம் செய்து கொள்வது குறித்த உம்மன் சாண்டியின் தரவு (2012) கேரளாவில் லவ் ஜிஹாத் விவாதத்தை மீண்டும் எழுப்பியது.
2019 ஆம் ஆண்டில், கேரள சிறுபான்மை ஆணையத்தின் துணைத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கிறிஸ்தவ பெண்களை ஒழுங்காக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவது குறித்து, பயங்கரவாதமாக மாற்றுவது குறித்து கடிதம் எழுதினார், மேலும் “லவ் ஜிஹாத் நடந்து கொண்டிருக்கிறது”.
2020 ஆம் ஆண்டில், சிரோ-மலபார் சர்ச் அதிகரித்து வரும் லவ் ஜிஹாத் வழக்குகள் குறித்து கவலை தெரிவித்தது.கேரளாவில் உருவாக்கப்பட்ட வழக்கம் உலகளவில் சென்றுள்ளது.பர்மா மற்றும் தாய்லாந்தில் உள்ள பௌத்தர்கள், லவ் ஜிஹாத் இஸ்லாமியமயமாக்கலுக்கான ஒரு கருவி என்றும், மதம் மாற்றுவதற்கான வழிமுறையான கலப்புத் திருமணங்கள் பௌத்தத்தின் ஆணிவேரை அசைத்துவிடும் என்றும் கூறுகிறார்கள் (பௌத்த இஸ்லாமியோபொபியா: நடிகர்கள்,கருத்துக்கள், சூழல்கள்).
காலாவதியான திட்டம்
இந்த சிக்கலுக்கான தீர்வு நமது சிந்தனையில் ஒரு முன்னுதாரண மாற்றத்திற்கு அழைப்பு விடுகிறது.20 ஆம் நூற்றாண்டின் ஸ்தாபகக் கருத்துக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது.ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தின் மரணம் இப்போது காலாவதியான விருப்பமாகும். புதிய யதார்த்தம் என்னவென்றால், மதம் ஒரு சக்திவாய்ந்த நடிகராக உருவாகி வருகிறது.சமகால தாராளவாதிகள் 1918 இல் அவர்களின் கதாநாயகரான மேக்ஸ் வெபர் கூறியதை நினைவு கூரலாம்.அவர் கோட்பாடின்ப்படி, விஞ்ஞானமானது , மதம், மூடநம்பிக்கைகளை அரிக்கும் மற்றும் அந்த இரண்டையும் நம்பும் உலகத்தை மாற்றும்; ஆனால் அறநெறி, மதிப்பீடுகள் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியாது என்று அவர் கோட்பாடு கொண்டிருந்தார். அறிவியல் மற்றும் மதத்தின் போதாமையை அவர் முன்னறிந்து , .நவீன உலகில் ஒரு அடிப்படை முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும் என்றார்.
பழைய பாணியிலான மதத்திற்குத் திரும்புவது ஒரு தரக்குறைவான தீர்வு என்று வெபர் நினைத்திருந்தாலும், அவருக்கு ஒரு முழு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அஞ்சியவை அனைத்தும் உண்மையாகி வருவதாகத் தெரிகிறது.உலகம் அதிர்ச்சி தரும் வகையில் மதத்தின் பிடியில் இருக்கிறது.2050 ஆம் ஆண்டில் மதத்துடன் தொடர்புடைய மக்கள் தொகை 2.3 பில்லியனாகவும்,தொடர்பில்லாதவர்கள் வெறும் 0.1 பில்லியனாகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1970 களில் 5 ல் 1 பேர் மதப்பற்று இல்லாதவர்களா இருந்தார்கள்; இது 2050 ஆம் ஆண்டில் 7 இல் 1 ஆக இருக்கும் — இது மதப்பற்று இல்லாத நபர்களின் சதவீதத்தில் சரிவைக் காட்டுகிறது.
இதை மேற்கோள் காட்டி உலக பொருளாதார மன்றம் கூறுகிறது: “கட்டமைக்கப்பட்ட மதத்தின் மரணம் குறித்த அறிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன.சமீபத்திய ஆய்வுகளின்படி, உலகளாவிய மதத்தை நம்பும் மக்களின் வளர்ச்சி, 2010 மற்றும் 2050 க்கு இடையில் நம்பாதவர்களின் வளர்ச்சியை விட 23 மடங்கு அதிகமா இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது”.இரண்டு முக்கியமான முடிவுகள் — “நாகரிகங்களின் மோதல்” பற்றிய சாமுவேல் ஹண்டிங்டனின் ஆய்வறிக்கை மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக பன்மைத்துவ திட்டம் 1995, மதத்தின் மீள் எழுச்சியின் முக்கியத்துவத்தினால் எழுதப்பட்டது. மதவாதம் அதிகரித்து , வெப்பீரியனிசம் குறைந்து கொண்டிருக்கும் உலகில், சமகால தாராளமயக் கருத்துக்கள் காலாவதியானதாகவும், மதத்துக்காகக் காதலிப்பது போன்ற ஆபத்தான பிரச்சினைகளைக் கையாள இயலாது என்றும் தெரிகிறது.கடந்த காலத்தில் மதத்தொடர்பு குறைந்ததால் எழுந்த சமகால தாராளமயத்தை விட மிகவும் பொருத்தமான ஒரு வித்தியாசமான தீர்வு, நமக்குத் தேவை.